Sunday, May 29, 2016

திருக்குறளும் வேதாத்திரியமும் - Thirukural vs Vethathriyam

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
குரு வாழ்க குருவே துணை


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்


அமரருள் - தேவருள்/ இறைவனுள் / இறைநிலையுள்.
அடக்கம் - மனதை இறைநிலையில் அடக்கி.
அடங்காமை - மனதை சரியாக பயன்படுத்ததா / மனதை அடக்கத் தெரியாத அல்லது முடியாத
ஆர் இருள் - மாயை / தான், தனது என்னும் மாயை / பிறப்பின் முழுமை அறியாத வாழ்வு.
எவரொருவர் இறைநிலையை உணர்ந்து, அதனோடு அடக்கம்(துரியாதிதம்) பெறுகிறாரோ அவர் அமரருள்(இறைநிலையுள்) உய்ப்பர் {பிற உயிரை தான் உயிர் போல் மதிப்பர்.அனைத்து உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் மலரும்}.
அப்படி மனதை இறைநிலையோடு அடக்கத் தெரியாதோருக்கு வாழ்கை ஒரு இருளாகவே தோன்றும்.

_____________________________________________________________________________________________

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.


எண்ணிய எண்ணியாங்கு எய்து - எண்ணியது எண்ணியவரே நடக்கும். யாருக்கு ?
எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - யார் திண்ணியார் ?
எண்ணம் VS திண்ணம் - எப்போது எண்ணம் திண்ணமாக மாறும் ?
எண்ணம் உணர்ச்சியில் இருந்தால் திண்ணமாக மாறுமா ?
அல்லது
எண்ணம் மனதை அமைதி நிலைக்கு(தவ நிலை) கொண்டுவந்தால் திண்ணமாக மாறுமா ?
தவத்தில் இருக்கும்போது வரும் எண்ணம் திண்ணமாக இருக்குமா ? இருக்காதா ?
துரியாதீதம்(மனஅலைச் சுழல் வேகம் 0 - 3 )தவ நிலையில் - இறைநிலையில் தோய்ந்தோர் என்னும் நல்ல எண்ணம் செயலுக்கு வருமா வராத ?
யார் ஒருவர் திண்ணியராக(இறைநிலையில் தோய்ந்து - மனஅலைச் சுழல் வேகம் 0 - 3) வாழ முடிகிறதோ அவர்கள் எண்ணும் எண்ணம் எண்ணியபடியே நடக்கும்.


_____________________________________________________________________________________________

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை -
பண்பும் பயனும் அது
 

அன்பு இருக்கும் இடம் சிவம் இருக்கும் இடம் ... அங்கு அமைதி இருக்கும்
அறன் இருக்கும் மனம் நற்செயல்களே புரியும் .. இதை கொண்டு அமையும் இல்லற வாழ்வில் செயலுக்கு விளைவாய் நற்பண்புகளே பயனாய் விளைந்து நன்மை புரிந்து வளமடைய செய்யும் ...
அன்பு --- பதமடைந்து ஒன்றென உணரும் நிலை
அறம் ---- ஒழுக்கம் ,கடமை , ஈகை உணர்ந்த நிலை

_____________________________________________________________________________________________

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

எல்லாம் நன்மையே! (Everything is for the good)

துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும்.

அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை. துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்? மனிதனிடம் தானே வரவேண்டும். இடம் கொடுக்கக்கூடிய மனிதனிடம் தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.

நான் பிறந்தேன்; வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு தான் இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை; உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை; நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு; இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும்போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதிலே ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத் தான் இருக்கும். வாழ்க்கையை ஒட்டிப் பார்த்தீர்களானால், எல்லோருக்கும் நிறைவாகத் தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பதே இல்லை.


No comments:

Post a Comment