Monday, June 6, 2016

கவலை சினம் ஒழிக்க வழி

சினம் கவலை எனும் இரண்டும் மனிதர் வாழ்வைச்

சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்.

மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்

மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்.

தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி

சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு

இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்

என்று பல முறை கூறு வெற்றிகிட்டும்
.

No comments:

Post a Comment