Monday, October 31, 2016

Important Natural Medicine by Vallal Perumaan in Tamil - (வள்ளல் பெருமான்)



If you read Thiru Arutpa you can get all 480 medicine details :-)
Thanks for Reading :-)
Share with everybody :-)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் !!!

Regards,
Saravana

Monday, June 6, 2016

ஒரு நாளைக்கு, ஒரு பாடல் - Daily Prayer 3

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்

உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்..

பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்..

பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்

கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்

கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்

நல் வாழ்வை அளிக்கும் மெய்ஞான ஒளி வீசட்டும்

நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்..

வாழ்க வையகம் ...வாழ்க வளமுடன்

கவலை சினம் ஒழிக்க வழி

சினம் கவலை எனும் இரண்டும் மனிதர் வாழ்வைச்

சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்.

மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்

மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்.

தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி

சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு

இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்

என்று பல முறை கூறு வெற்றிகிட்டும்
.

ஒரு நாளைக்கு, ஒரு பாடல் - Daily Prayer 2

ஆதியென்னும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று

அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி ,

மோதி இணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப

மூலகங்கள் பலவாகி அவையிணைந்து

பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்

பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி

நீதி நெறி உணர் மாந்தாராகி வாழும்

நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்
.

Sunday, May 29, 2016

ஒரு நாளைக்கு, ஒரு பாடல் - Daily Prayer Song 1

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்

உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்,

உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க

ஒருலககூட்டாட்சி வலுவாய் வேண்டும்.

உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்

உழைத்துண்டு வளம் காத்து வாழவேண்டும்.

உலகெங்கும் மனிதகுலம் அமைதி யென்னும்

ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்
.

மகரிஷியின் குடும்ப அமைதிக்கான குறிப்புகள் (Tips to maintain Family Peacefuly)

குடும்ப உறுப்பினர்கள் உடல்நலம், மனவளம், மன அமைதி, செல்வ வளம் காக்க வேண்டும்.

தம்பதியரிடையே ரகசியம் இருக்கக் கூடாது.

வரவுக்குள் செலவு செய்தல் வேண்டும்.

தேவைக்கு அதிகமாகப் பொருள் சேர்க்கக் கூடாது.

சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் வேண்டும்.

உறுப்பினர் அனைவரும் உழைத்துண்டு வளம் காத்தல் வாழ்வினை உயர்த்தும்.

குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் உறுதியான நட்பு, உண்மையான நட்பு, நெருக்கமான நட்பு நிலவ வேண்டும்.

தம்பதியர் நட்புக்காக கற்பைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்யலாம்.

ஒருவரை மற்றவர் புரிந்துக் கொண்டு மற்றவர் கருத்துக்களை அறிதல், மதித்தல் அவசியம்.

தேவை, அளவு, முறை, காலம் என்பதில் ஏற்படும் வேறுபாடுகளை விட்டுக் கொடுத்தல் மூலம் சரி செய்தால் பிணக்கு எழாது.

தாய்மார்கள் வரவு செலவைத் திட்டமிட்டுச் செய்வதால் பொருளாதாரம் பிணக்கு இருக்காது.

குடும்பத் தலைவருக்குத் தன்முனைப்பு கூடாது.

சலனமற்ற, விசாலமான மனம்தான் எதையும் தாங்கும்.

பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமை, உடன் சுட்டிக் காட்டாமை, விட்டுக் கொடுத்தல், தியாகம் மன்னிப்பு தேவை.

நல்ல கருத்தேயாயினும் வாழ்க்கைத் துணைவர் ஒத்துக் கொள்ளவில்லையெனில் சிறிது காலம் தள்ளி வைத்தல் அவசியம்.

பிறரின் கடுஞ்சொற்களை அவை சொல்லப் படாதவை போல பாவிக்க வேண்டும்.

பால் உறவிலும் விட்டுக் கொடுத்தல் தேவை.

கணவன் - மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லக் கூடாது.

குழந்தைகள் முன்பு தம்பதியர் சண்டை சச்சரவு கூடாது.

தம்பதியரின் உறவை மதித்து, பெற்றோர் மக்கள் கூட்டுறவை மேம்படுத்துதல் வேண்டும்.

நட்பிலே கணவன் மனைவி உறவு மிகப் பெருமையுடையது. உடல், பொருள், ஆற்றல், என்ற மூன்றையும் ஒருவருக் கொருவர் மனம் உவந்து அர்ப்பணித்து வாழ்கைத் துணைவராகி இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழும் பெருமை கணவன் - மனைவி உறவில்தான்.

பொருள் ஈட்டுதலில் இருவரில் ஒருவரோ அல்லது ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வான திறமையும் பொறுப்பும் உடையவராகவோ இருக்கலாம். ஆயினும் காப்பது, நுகர்வது, பிறர்கிடுவது ஆகிய செயல்களில் இருவரும் சமமான பொறுப்பை ஏற்க வேண்டும். 

வாழ்க்கையிலேயே மேம்பாடாக, நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும் மனைவியைக் கணவனுமே. 

கணவன் மனைவி நட்பில் வலிவு பெறாதவர்கள் வாழ்வு குறையுடையதாகவே கருத வேண்டும். எனவே ஒவ்வொருவரும் கணவன் - மனைவி உறவை உயிருக்கும் மேலானதாக மதித்து போற்ற வேண்டும். 

எக்காரணத்திலேனும் இந்த நட்பு முறிந்தால் ஓராண்டு காலம் பொறுத்திருந்து இனி மீலாது என்ற முடிவு ஏற்பட்டு விட்டால்தான் திருமண ரத்துக்கும் மருமணத்திற்கும் முயற்சி மேற்கொள்ளலாம்

வேறுபட்ட உள்ளங்கள் காலத்தால் ஒன்றுபட இடமுண்டு. உணர்ச்சி வயப்பட்டு விவாகரத்து ஏற்படாதவாறு சமுதாயத்திலுள்ள அறிஞர்கள் தக்க பாதுகாப்பும் அறிவுரைகளும் வழங்க வேண்டும். தகுந்த காரணமின்றி எளிதாகத் திருமண ரத்துக்கு இடமளிக்காத சமுதாயமே ஆன்மிக வலுவிலும், ஒழுக்க உயர்விலும் பெருமைப்படத் தக்கதாக இருக்கும்.


....
மகரிஷி

திருக்குறளும் வேதாத்திரியமும் - Thirukural vs Vethathriyam

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
குரு வாழ்க குருவே துணை


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்


அமரருள் - தேவருள்/ இறைவனுள் / இறைநிலையுள்.
அடக்கம் - மனதை இறைநிலையில் அடக்கி.
அடங்காமை - மனதை சரியாக பயன்படுத்ததா / மனதை அடக்கத் தெரியாத அல்லது முடியாத
ஆர் இருள் - மாயை / தான், தனது என்னும் மாயை / பிறப்பின் முழுமை அறியாத வாழ்வு.
எவரொருவர் இறைநிலையை உணர்ந்து, அதனோடு அடக்கம்(துரியாதிதம்) பெறுகிறாரோ அவர் அமரருள்(இறைநிலையுள்) உய்ப்பர் {பிற உயிரை தான் உயிர் போல் மதிப்பர்.அனைத்து உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் மலரும்}.
அப்படி மனதை இறைநிலையோடு அடக்கத் தெரியாதோருக்கு வாழ்கை ஒரு இருளாகவே தோன்றும்.

_____________________________________________________________________________________________

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.


எண்ணிய எண்ணியாங்கு எய்து - எண்ணியது எண்ணியவரே நடக்கும். யாருக்கு ?
எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - யார் திண்ணியார் ?
எண்ணம் VS திண்ணம் - எப்போது எண்ணம் திண்ணமாக மாறும் ?
எண்ணம் உணர்ச்சியில் இருந்தால் திண்ணமாக மாறுமா ?
அல்லது
எண்ணம் மனதை அமைதி நிலைக்கு(தவ நிலை) கொண்டுவந்தால் திண்ணமாக மாறுமா ?
தவத்தில் இருக்கும்போது வரும் எண்ணம் திண்ணமாக இருக்குமா ? இருக்காதா ?
துரியாதீதம்(மனஅலைச் சுழல் வேகம் 0 - 3 )தவ நிலையில் - இறைநிலையில் தோய்ந்தோர் என்னும் நல்ல எண்ணம் செயலுக்கு வருமா வராத ?
யார் ஒருவர் திண்ணியராக(இறைநிலையில் தோய்ந்து - மனஅலைச் சுழல் வேகம் 0 - 3) வாழ முடிகிறதோ அவர்கள் எண்ணும் எண்ணம் எண்ணியபடியே நடக்கும்.


_____________________________________________________________________________________________

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை -
பண்பும் பயனும் அது
 

அன்பு இருக்கும் இடம் சிவம் இருக்கும் இடம் ... அங்கு அமைதி இருக்கும்
அறன் இருக்கும் மனம் நற்செயல்களே புரியும் .. இதை கொண்டு அமையும் இல்லற வாழ்வில் செயலுக்கு விளைவாய் நற்பண்புகளே பயனாய் விளைந்து நன்மை புரிந்து வளமடைய செய்யும் ...
அன்பு --- பதமடைந்து ஒன்றென உணரும் நிலை
அறம் ---- ஒழுக்கம் ,கடமை , ஈகை உணர்ந்த நிலை

_____________________________________________________________________________________________

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

எல்லாம் நன்மையே! (Everything is for the good)

துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும்.

அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை. துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்? மனிதனிடம் தானே வரவேண்டும். இடம் கொடுக்கக்கூடிய மனிதனிடம் தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.

நான் பிறந்தேன்; வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு தான் இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை; உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை; நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு; இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும்போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதிலே ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத் தான் இருக்கும். வாழ்க்கையை ஒட்டிப் பார்த்தீர்களானால், எல்லோருக்கும் நிறைவாகத் தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பதே இல்லை.